கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள முரிக்கன்சேரி அருகில் உள்ள தடியம்பாடு என்ற இடத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் திடீரென்று விஜிலென்ஸ் துறை சோதனை மேற்கொள்ள வந்த பொழுது ஒருவர் தப்பி ஓடினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சந்தேகம் அடைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 46,000 அதிகமான கணக்கில் வராத பணமும் அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பாட்டில்கள் விற்பனை செய்ததாகவும் போலியான மதுபானங்கள் வைத்திருப்பதையும் கண்டுபிடித்தனர். இரவு 8 மணி முதல் காலை 2 மணி வரை சோதனை நடைபெற்றது.
அந்த அரசு மதுபான கடையில் வேலை செய்த அனைவருக்கும் அரசு துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மேலும் நடவடிக்கைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.