கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தற்பொழுது மாறி மாறி வருகின்ற காலநிலையின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது கடந்த நாட்கள் வரை மட்டும் ஒரு மாதத்திற்குள்ளாகவே சுமார் 4 00க்கும் அதிகமான நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்பொழுது இடுக்கி மாவட்டத்தில் அதிகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது இதன் அறிகுறியாக கண்கள் எரிச்சல், மூக்கு அரிப்பு, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. எனவே கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இது மழைக்காலம் என்பதால் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே இக்காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை ஆலோசனை அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.