ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற 3 நண்பர்கள் பலி! ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து!

ஆடல் பாடல் நிகழ்ச்சியைக் காண ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 நண்பர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சாயல்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோனைமுத்து மகன் இசேந்திரன் (17), முனியசாமி மகன் அன்பரசன் (20) மற்றும் சண்முகவேல் மகன் லிங்கேஸ்வரன் (22). நண்பர்களான மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஒன்றாகவே வெளியில் சென்று வருவது வழக்கம்.

நேற்று முன் தினம் இரவு இவர்கள் மூவரும் மேலசெல்வனூர் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்க்க செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து 3 பேரும் தங்களது பெற்றோரிடம் கூறிவிட்டு, ஒரே இருசக்கர வாகனத்தில் மேல செல்வனூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் சாத்தங்குடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே ராமநாதபுரம் புத்தேந்தல் கிராமத்திலிருந்து மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி வேன் மீது மூவரும் பயணித்த இரு சக்கர வாகனம் மோதி, அந்த நொடியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் பயணித்த மூவரும், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே இசேந்திரன், அன்பரசன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்து லிங்கேஸ்வரன் உயிருக்கு போராடினார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் லிங்கேஸ்வரனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் அவர் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வேனிலேயே இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மேலும் ஆம்னி வேன் ஓட்டுநர் பாலமுருகனும் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கடலாடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த நண்பர்கள் 3 பேரும் விபத்தில் பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

– பாரூக், சிவகங்கை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp