ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் இரு மாணவர்களுக்கு கத்திக்குத்து!!!.

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் இரு மாணவர்களுக்கு கத்திக்குத்து!!!.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழ முடிமன் கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பன்னிரண்டாம் வகுப்பிற்கு தேர்வு நடைபெற்றுள்ளது. அப்பொழுது நைனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் தேர்வில் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதை ஆழிபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர், வகுப்பில் இருந்த ஆசிரியரிடம் சொல்லிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து இரு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
அப்போது குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் இரு மாணவர்களையும் சண்டை போட வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

https://youtu.be/Zj5KwHRJ49M
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதை அடுத்து நைனார்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவரை இடது விலாவில் குத்தியுள்ளார். தொடர்ந்து ஆழி பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இச்சம்பவம் சுமார் 11 மணி அளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கத்திக்குத்தில் காயம் அடைந்த ஆழி பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவரின் தம்பி பள்ளியில் இருந்து வெளியே சென்று செல்போன் மூலமாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதை அடுத்து காயம் அடைந்த பள்ளி மாணவர்கள் இருவரும் மீட்கப்பட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த பள்ளியில் மணியாச்சி டிஎஸ்பி பொறுப்பு சிவசுப்பு நேரில் விசாரணை நடத்தினார். மேலும் இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் நைனார்புரத்தைச் சேர்ந்த மாணவரை ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp