கருமலை எஸ்டேட் மருத்துவமனை வளாகம் அருகே கரடி நடமாட்டம்!! பொதுமக்கள் அச்சம்!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் உள்ளன இந்த எஸ்டேட்டுகளின் ஏதாவது ஒரு பகுதியில் வனவிலங்குகள் ஊடுருவுவது வாடிக்கையாக்கி உள்ளது. காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைப்பதும் குடியிருப்புக்கு அருகே வருவதும் சிறுத்தை கரடி போன்ற வன விலங்குகள் குடியிருப்புக்கு அருகே வந்து மக்களை அச்சுறுத்தி வருவதும் தொடர்கதை ஆகிவிட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதுபோல் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் மருத்துவமனை வளாகம் அருகில் நள்ளிரவில் உலா வரும் கரடியால் நோயாளிகள் பயத்தில் உள்ளார்கள் மற்றும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதினால் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் அச்சத்தில் இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மற்றும் வால்பாறை பகுதியில் கரடி, யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதினால் பொதுமக்கள் தினந்தோறும் அச்சத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் குட்டிகளுடன் முகாமில் உள்ள காட்டு யானைகளால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் பணியை செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp