கோவை சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் 34 வயதான பத்ரகாளி, இவர் நேற்று முன்தினம் இரவில் செட்டிப்பாளையம் ரோட்டில் ரோந்து பணி மேற்கொண்டார். அப்போது 2 பேர் காருக்குள் அமர்ந்து கொண்டு மது குடித்ததாக தெரிகிறது.
இதையடுத்து போலீஸ்காரர் பத்ரகாளி அவர்களிடம் பொதுவெளியில் மது அருந்துவது பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் இருவரும் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பத்ரகாளி தனது செல்போனில் அவர்களை வீடியோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் இருவரும் அவரை தாக்கியதாக தெரிகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீஸ்காரரை தாக்கிய போத்தனூர் ஈஸ்வரன் நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் 32 வயதான சிவசங்கரன். இந்திரா நகரை சேர்ந்த ஐ. டி. ஊழியர் 30 வயதான ஸ்ரீவிக்னேஷ் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.