மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட விலை உயர்ந்த புல்லட் உள்ளிட்ட பல இருசக்கர வாகனங்கள் திருடு போனதாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தது.
இதனைத்தொடர்ந்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் சாந்திபாலாஜி தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க விசாரணையை முடுக்கினர். அப்போது கருங்காலக்குடியில் காணாமல் போன இருசக்கர வாகனம் ஒன்றை அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி காட்சியில் ஒருவர் திருடி சென்றது தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திய போது, திருட்டில் ஈடுபட்டது கொட்டாம்பட்டி அருகே உள்ள கம்பூர் கோயில்பட்டியை சேர்ந்த அரசு (27) மற்றும் சிவகங்கை மாவட்டம் சிராவயலை சேர்ந்த அழகுமணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் திருடி வைத்திருந்த விலை உயர்ந்த புல்லட் பைக் உள்ளிட்ட 9 இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கொட்டாம்பட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இவர்கள் இருவரும் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அதிரடியாக விசாரணையில் ஈடுபட்டு பைக் கொள்ளையர்களை கைதுசெய்த இச்செயல் பொது மக்களிடையே காவல்துறையினரின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
– தமிழரசன், மேலூர்.