திருப்பத்தூர் கோட்டத்திற்குட்பட்ட எஸ்.புதூர் துணைமின்நிலையத்தில் எதிர்வரும் 21.09.2023 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே எஸ்.புதூர் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான எஸ்.புதுார், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி ஆகிய ஊர்களிலும் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் எதிர்வரும் வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனவும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே நாளில் சிங்கம்புணரி நகரில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற இருப்பதால் வேளார் தெரு, காசியாபிள்ளை நகர், சந்திவீரன் கூடம், முத்தையா காலனி மற்றும் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் 21.09.2023 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனவும் திருப்பத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.