கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மூன்று தலைமுறைக்கு முன்பு பிற மாவட்டங்களில் இருந்து தனது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்வாதாரத்தைத் தேடி வால்பாறைக்கு குடியேறினார்கள். அப்பொழுது அவர்களுக்கு தமிழக அரசும் எஸ்டேட் நிர்வாகமும் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இந்நிலையில் தேயிலையின் உற்பத்தி குறைவு காரணமாக அவர்களின் ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது இதனால் விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதியம் கிடைக்காததாலும் வனவிலங்கு தொந்தரவு இருந்ததாலும் மூன்று தலைமுறைக்கு முன்பு குடியேறிய தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தேடி சமவெளிப் பகுதியான ஈரோடு திருப்பூர் கோவை என சென்றுவிட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பொழுது இருக்கும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம் அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்காமல் அலட்சியப் போக்கு காட்டி வருகிறது மேலும் வன விலங்குகளின் தொந்தரவும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது. தங்களின் எதிர்கால வாழ்வாதாரத்தையும் தங்களின் குழந்தைகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க பல்வேறு இன்னல்களுக்கு இடையே வேலை செய்து வருவதாக கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் தோட்ட தொழிலாளர்கள்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பதவியேற்ற உடன் நாளொன்றுக்கு 425 ரூபாய் 40 காசு வழங்க அரசாணை பிறப்பித்தார் இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் Importance அறிவிப்பை ஏற்று எங்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் நாங்களும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் முதல்வரின் அறிவிப்பு காற்றோடு காற்றாக போன இடம் தெரியவில்லை தமிழக அரசு அறிவித்த சம்பளமும் கிடைக்கவில்லை எங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாய் நிற்கிறது.
தமிழக முதல்வர் அறிவித்த சம்பளம் கிடைக்கக் கூடாது என்பதற்காக தனியார் எஸ்டேட் நிர்வாகத்தோடு இப்பகுதியில் இருக்கும் ஐந்து தொழிற்சங்க தலைவர்கள் ரூபாய் 395 ரூபாய்க்கு இருதரப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளனர். அதன் விளைவாக நிர்வாகமும் 395 க்கு மேல் எங்களால் கொடுக்க முடியாது தேயிலையின் வீழ்ச்சி, தேயிலை தயாரிக்கும், மூலப் பொருட்களின் விலை அதிகம் அதனால் அரசு ஊதியம் வழங்க முடியாது. நாங்களும் தொழிற்சங்கங்களும் இருதரப்பு ஒப்பந்தம் செய்தது ரூபாய் 395 அரசும் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் விளைவாக தனியார் எஸ்டேட்டில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 395 மற்றும் பஞ்சபடியுடன் தற்பொழுது 425 ரூபாய் கிடைக்கிறது ஆனால் அரசு அறிவித்த சம்பளம் மற்றும் பஞ்சபடியுடன் தற்பொழுது சுமார் ரூபாய் 490 கிடைக்க வேண்டும். இவர்களால் ஒரு தொழிலாளருக்கு நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 32,000 இழப்பு ஏற்படுகிறது. ஆனால் தனியார் தோட்டத் நிறுவனங்களுக்கு அதிகம் லாபம் .
இவர்களுக்காவது இப்படி ஆனால் நாங்க தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிங்கோனா தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்தில் வேலை செய்கிறோம் எங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடையாது மருத்துவ வசதியும் கிடையாது. வனவிலங்கு தொல்லையும் அதிகம் ஆனால் எங்களுக்கு கூலியோ ரூபாய் 331 நாங்கள் எங்கே போய் சொல்லுவோம் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்த சம்பளமே இன்னும் கொடுக்க முடியாமல் இப்பகுதியில் இருக்கும் ஐந்து தொழிற்சங்கங்கள் ஏடிபி எல் பி எஃப், ஐ என் டி எஸ் சி, ஏ ஐ டி யு சி, விடுதலை சிறுத்தை ஆகிய தொழிற்சங்க தலைவர்கள்
இவர்களுக்கு ஆதரவாக சில தொழிற்சங்க தலைவர்களும் எடுக்கும் முடிவு இறுதியானது . என நாங்கள் நம்ப வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இனியாவது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் துறை அமைச்சர் அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தனியார் தோட்டங்களில் வழங்குவது போல் எங்களுக்கும் அரசு அறிவித்த சம்பளத்தோடு குறைந்தபட்சம் 490 கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுநலத்துடன். கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து எனது, பெயரோ, புகைப்படமோ செய்தித்தாள் போடாதீர்கள் நாங்கள் மீண்டும் எஸ்டேட்டில் வேலை செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மாறிவிடும் என்று குமறுகிறார்கள் தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள்.
இவர்களின் நிலை அறிந்து துறை தமிழக முதலமைச்சர் அவர்களோ அல்லது துறை அமைச்சர் அவர்களோ அல்லது அரசு உயர் அதிகாரிகளோ நமது செய்தியின் வாயிலாக அறிந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
-P.பரமசிவம், வால்பாறை.