பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா!!

பொள்ளாச்சி ;கோவை மாவட்டம் மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா அவர்கள் “ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களிடையே செப்டம்பர் 2ஆம் தேதி சிறப்புரை ஆற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ் விழாவுக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை, வணிகவியல் துறை மற்றும் பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்தனர். இக்கருத்தரங்கத்தில் முதலாவதாக தேசிய மாணவர் படை தலைவர் முனைவர் ம. சித்திரைச்செல்வன் அவர்கள் வரவேற்புரை நல்கினார் கல்லூரி முதல்வர் முனைவர் முத்துகுமரன் அவர்கள் தலைமையுறையாற்றினார்.

பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா அவர்கள் “ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கும்போது “உடல் நலமும், சுகாதாரமும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அத்தியாவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்து உரைத்தார். மேலும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வாழ்க்கையில் எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிபெற உதவுகிறது.

“பின்னர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகளுக்கு மற்றும் என்.ஜி.எம். கல்லூரியின் சேவையை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். வணிகவியல் துறை தலைவி முனைவர் பிருந்தா அவர்கள் சான்றிதழ்கள் பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி பேசினார். இறுதியாக விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இணைப்பேராசிரியர் முனைவர் ஷண்முக பிரியா அவர்கள் நன்றியுறையாற்றினார்.

இவ்விழாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் மன்ற தலைவர் திரு வெள்ளை நடராஜன் மற்றும் பொள்ளாச்சி 26 ஆவது வார்டு கவுன்சிலர் திரு சாந்தலிங்கம் ஆகியோர் பங்கு பெற்று சிறப்பு செய்தனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் மற்றும் வணிகவியல் துறை மணவர்கள், பேராசியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp