மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பாக ஆய்வு!!!.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (19.09.2023), மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி வட்டாட்சியர் திரு.பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பூங்கோதை விளாத்திகுளம்.