மாமன்னன் சுந்தரலிங்கத்தின் 224ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகில் சுந்தரலிங்கம் நகரில் அமைந்துள்ள மாமன்னன் சுந்தரலிங்கம் இல்லத்தில் உள்ள மண்டபத்தில் அவரது சிலைக்கு 224ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அருகில் உள்ள நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உலகின் முதல் தற்கொலை படை தலைவர் மாமன்னர் சுந்தரலிங்கனார் 224வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 1799 செப்டம்பர் 8ஆம் தேதி சுந்தரலிங்கம் தனது முறைப்பெண் வடிவுடன் ஆடுமெய்ப்பவர்களைப் போல வேடமணிந்து, வெள்ளையர்களின் வெடிமருந்து கிடங்குப் பகுதிக்குப் போனார். தீப்பந்தத்தைக் கொளுத்தியபடி சுந்தரலிங்கமும், வடிவும் வெடிமருந்துக் கிடங்கிற்குள் பாய்ந்தார்கள். பலத்த வெடிச்சத்தத்துடன் கிடங்கு தீப்பிடித்து எரிந்தது. சுந்தரலிங்கமும், வடிவும் இந்திய சுதந்திரப் போரின் முதல் தற்கொலைப் படை தாக்குதல் தொடுத்தவர்களானார்கள். அவர்களது வீரமரணத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற போரில் பாஞ்சாலங்குறிச்சி ஆங்கிலேயர் வசமானது.
நினைவுச் சின்னம்:
தளபதி சுந்தரலிங்கம் அவர்களின் நினைவாக பிப்ரவரி 23, 2014 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை சந்திப்பில் ஏழு அடி உயர வெண்கலச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.