கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள முடீஸ் டவுன் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து பேருந்தில் ஏறி மற்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தின் அருகில் குப்பை கழிவுகளை கொட்டி அசுத்தம் செய்துள்ளார்கள். மேலும் கோழி இறைச்சி கழிவுகளையும் சில மர்ம நபர்கள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து குட்டி விட்டு சென்று விடுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அந்தப் பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது மழைக்காலங்களில் பேருந்து நிலையப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன இதனால் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.
மேலும் மழைக் காலங்களில் குப்பை கழிவுகள் மழை நீரில் அடித்து வரப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடைக்கின்றன இதனால் பேருந்தில் ஏற வரும் பொதுமக்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் அருகில் வசிக்கும் பொது மக்களும் நோய் தொற்று ஏற்படக்கூடிய நிலைமைக்கு ஆளாகின்றனர்.
மேலும் கோழி இறைச்சிக் கழிவுகளை வீசி செல்லும் மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் கொட்டப்படும் குப்பைகளை உரிய முறையில் முறையாக பராமரித்து துர்நாற்றம் வீசாத அளவிற்கு அதனை முறைப்படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.
-வால்பாறை, திவ்யகுமார்.