முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா மற்றும் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நீயா நானா புகழ் கோபிநாத் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரி மற்றும் பார்க் கட்டிடக்கலை கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் கருமத்தம்பட்டி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கவுரவ விருந்தினர்களாக பார்க் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர்கள் ஹுசைன் அஹமத், MD, சேரன் அகாடமி, கோவை மற்றும் மிருதுபாஷிணி, மூத்த மனித வள மேலாளர், நல்லாஸ் தொழில்நுட்பம், கோவை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பு சேர்த்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பார்க் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. P. V. ரவி தலைமையில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி வழிகாட்டுதலில் விஜய் டிவி நீயா நானா புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலாமாண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், காலையில் முதல் 20 நிமிடங்களே உங்களது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்றது. ஆகவே காலையில் அலைபேசியை கையில் எடுக்கவேண்டாம். நேர்மறையாக சிந்திக்க உங்கள் மூளையை பழக்கிக்கொள்ளுங்கள். எந்த ஒரு போதை பழக்கத்திற்கும் ஆளாகாதீர்கள்.
எல்லாவற்றினும் மேலாக நீங்கள் இந்த நிலையை அடைவதற்கு உங்கள் பெற்றோரின் உழைப்பும், தியாகமும் என்பதை மறவாதீர்கள் என்று தனது எழுச்சிமிகு பேச்சால் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி, விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரிகளின் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் Dr. அங்காளபரமேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.