தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் புதியம்புத்தூரில் நடுவக்குறிச்சி ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் திடலில் வளம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு கபடி போட்டியை சாமிநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் அவர்கள் தொடங்கி வைத்தார் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த கபடி போட்டியில் 30 க்கு மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன ஓட்டப்பிடாரம் அதான் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு கிராமத்தில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நான்கு அணிகளுக்கு பரிசுகளும் வெற்றி கோப்பைகளும் முன்னாள் சாமிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் அவர்கள் வழங்கினார்.
இதில் முதல் பரிசு DVK அணி வெற்றி பெற்றது இரண்டாவது பரிசு அதிபன் அணி வெற்றி பெற்றது மூன்றாவது பரிசு செவல்குளம் நான்காவது பரிசு இந்திரா நகர் ஆகிய அணிகளுக்கு பரிசு கேடயமும் வழங்கப்பட்டது. இந்த கபடி போட்டியை ஊர் நாட்டாமை மாற்றும் DVK இளைஞர்கள் இணைந்து நடத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.