விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி.!!!
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு மற்றும் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு படை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஒத்திகை பயிற்சியில் மாணவ மாணவியர்களுக்கு மழைக்காலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது எப்படி விழிப்புணர்வுடன் இருப்பது என்று நிலைய அலுவலர் ராஜேந்திரன் தீயணைப்பு படை குழுவினருடன் சேர்ந்து செயல்முறை விளக்கம் செய்து காட்டி விளக்கினார். இந்த ஒத்திகை பயிற்சியில் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-க. ராஜேஷ்
விளாத்திகுளம் கிழக்கு பகுதி.