விளாத்திகுளத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணியை கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் நபார்டு வங்கி உதவியுடன் கிராமபுற
உட்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே அறுபது லட்சம் மதிப்பீட்டில் விளாத்திகுளம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் விளைபொருள் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களும் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.மேலும் நிகழ்வில் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் திருநெல்வேலி விற்பனை குழு செயலாளர் விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வேளாண்மை அலுவலர் துணை வேளாண்மை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர் விற்பனை கூட இளநிலை உதவியாளர் திமுக ஒன்றிய,பேரூர் கழக செயலாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம்
-பூங்கோதை