இரு சக்கர வாகன ஓட்டுபவர்கள் தற்போது அதிக அளவில் எலக்டரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.இந்நிலையில்,உள்நாட்டு எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான கௌரா எலக்ட்ரிக் நிறுவனம் 2 மாடல்களில் அதிவேக திறன் கொண்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஓட்டல் அரங்கில் நடைபெற்றது… G5 மற்றும் G6 ஆகிய மாடல்களில் வெளிவந்துள்ள இந்த ஸ்கூட்டர்களை, கௌரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கௌதம் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும். மேலும் இதன் உட்சபட்ச வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் செல்ல கூட இந்த ஸ்கூட்டர்களுக்கு பதிவு எண் மற்றும் வாகன காப்பீடு கட்டாயம் என தெரிவித்தனர்..சார்ஜிங் குறித்த அனைத்து தகவல்கள்் குறித்த அதிநவீன வசதிகளுடன் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளன.
மேலும் இந்த ஸ்கூட்டர்களில் லித்தியம் பெரஸ் பாஸ்பேட் (LFP) வேதியியல் தொழில்நுட்பத்தில் தயாரான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் AIS 156 தரச்சான்று பெற்றுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை ஒரு புதிய நிலைக்கு எடுத்துச் செல்கிறது, மேலும் இந்த LFP பேட்டரிகள் இந்திய தட்பவெப்ப நிலைக்கு மிகவும் உகந்தது. இந்த ஸ்கூட்டர்களில் தண்ணீர் உள்ளே சென்றுவிடாத வகையிலான ஐபி67 தரத்திலான மோட்டார், பேட்டரி மற்றும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் அழகான தோற்றம் முன்புறத்தில் உள்ள பெரிய விளக்குகள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு ஆகியவை காண்போரை வெகுவாக கவர்கின்றன. இதில் உள்ள 100 சதவீத எல்இடி லைட்டிங் சிஸ்டம் பாதுகாப்பான மற்றும் சிறப்பான லைட்டிங்கிற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று தெரிவித்தனர். இந்த வாகனங்களின் மிக முக்கிய பாகமான பேட்டரி முழுவதும் எங்கள் நிறுவனத்தாலேயே மிகவும் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறது. இது பேட்டரி தொழில்நுட்பத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்களின் 100க்கும் மேற்பட்ட ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.
-சீனி, போத்தனூர்.