தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்தியவர் கைது – ரூபாய் 1,56,000/- மதிப்புள்ள 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பு வின்சென்ட் அன்பரசி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புதியம்புத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் மதுரை மாவட்டம் பாஸ்கரதாஸ்நகரை சேர்ந்த செண்பகமூர்த்தி மகன் கார்த்திகேயன் (22) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடனே மேற்படி போலீசார் எதிரி கார்த்திகேயனை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,56,000/- மதிப்புள்ள 200 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி