குடும்பத் தகராறில் ரேஷன் கடை பெண் ஊழியர் வெட்டிக் கொலை!!

  விளாத்திகுளம் அருகே குடும்பத் தகராறில் ரேஷன் கடை பெண் ஊழியரை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் தேடி வருகி்னறனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள குமரன் நகர் பகுதில் புதிதாக வீடு கட்டி வசித்து வருகிறார். இவர் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலைபார்த்து வருகிறார்.

இவரது மனைவி அம்பிகாபதி. ராமச்சந்திராபுரம் கிராமத்தில் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இன்று காலை தம்பதியர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் லட்சுமணன் அம்பிகாபதியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலே அம்பிகாபதி இறந்தார். அக்கம் பக்கத்தினர் விளாத்திகுளம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அம்பிகாவதி உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து கொலை செய்த லட்சுமணனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

விளாத்திகுளம் நிருபர்

பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp