கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
கோயமுத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் ஆறாம் பெரு விழா நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.நாளைய
வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இச்சங்கத்தின் பொறுப்பு தலைவர் முத்தமிழ் செல்வன், கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை அரசு கட்டுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டி முறையாக அமல்படுத்துவதை அரசு கண்கானித்து அதை முழுமையாக நடைமுறை படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைப்பதாக தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.