தருவைக்குளம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தருவைக்குளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த முகாமில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் குடற்புழு நீக்குதல் தடுப்பூசி போடுதல் சினைப் பரிசோதனை தாது உப்புகள் வழங்குதல் ஆகியவை சிறப்பு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் இலவசமாக அளிக்கப்பட்டது.
சிறந்த கால்நடை வளர்ப்பு முறையை பின்பற்றிய கால்நடை விவசாயிக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
துறை வல்லுநர்கள் மூலம் சுகாதாரமான கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த முறையில் கால்நடைகளை பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் டாக்டர் கெளரி சங்கர் டாக்டர் சரண்யா டாக்டர் பெரியசாமி கால்நடை ஆய்வாளர் சகாயமேரி ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனை மரியான் தருவைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் காடோடி தருவைக்குளம் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம் தயாளன் கிளை பிரதிநிதி பிரஸ்னவ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.