தூத்துக்குடி பாஜக சார்பில் விஸ்வகர்மா திட்டத்தை பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.!!!
பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் அன்று துவங்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்தின் நன்மைகள் பற்றியும் என்னென்ன ஆவணங்களுடன் வங்கியை அணுக வேண்டும் என்பது பற்றியும் 18 வகையான தொழில் செய்பவர்கள் பயன்பெறலாம் என்பது பற்றியும் விஸ்வகர்மா நலச்சங்க மாவட்ட தலைவர் S.முத்துசாமி மற்றும் மாவட்ட செயலாளர் A.கண்ணன் ஆகியோரோடு இணைந்து வல்லநாடு விஸ்வகர்மா சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோவிலில் வைத்து செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தக் கூட்டம் மாவட்ட செயலாளர் வக்கீல் R.பிரபு தலைமையிலும் ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து முன்னிலையிலும் கிளைத்தலைவர் மீனாட்சி சுந்தரம், கணேசன், ஆன்மீக பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் தம்பான் பிறமொழி பிரிவு மாவட்டச் செயலாளர் தம்பான் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் குமார் ஒன்றிய செயலாளர் முத்து ஈஸ்வரி மகளிர் அணி ஒன்றிய பொதுச் செயலாளர் வேல்மதி மற்றும் இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான விஸ்வகர்மா தொழில் செய்யும் பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.