தொலைந்த அல்லது திருட்டுப் போன செல்போன்களை “செல் டிராக்கர்’” மூலம் கண்டுபிடித்த வேலூர் சரக காவல்துறையினர்!! செல்போன்களை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி!!!

தொலைந்த அல்லது திருடு போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதியை வேலூர் மாவட்ட காவல்துறையினர் அறிமுகப்படுத்தி இருந்தனர். ஒரு செல்போன் தொலைந்தாலோ, திருடு போனாலோ அதனை கண்டுபிடிப்பதற்காக காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொலைந்த அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க வேலூர் காவல்துறையினர் ‘செல் டிராக்கர்’ என்ற செயலியை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துசாமி I.P.S., S.P திரு. N.மணிவண்ணன் I.P.S ஆகியோர் அறிமுகம் செய்து வைத்திருந்தனர்.

அந்த செயலியில் தொலைந்த செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது மேலும், 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உரிமையாளரின் விவரத்துடன் ஐஎம்இஐ எண்ணை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வேலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் பெறப்பட்ட 371 புகார்கள் Cell Tracker அறிமுகம்படுத்தபட்ட 15 நாட்களிலேயே துரித நடவடிக்கையின் மூலம் சுமார் ரூ.35,00,000/- மதிப்புடைய 162 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் முனைவர் M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வேலூர் மாவட்ட காவல் துறையினர் இரண்டாம் கட்டமாக சுமார் 210 செல்போன்களை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர், மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 10-10- 2023 அன்று நடைபெற உள்ளது எனவே அனைவரும் கலந்து கொள்ள காவல்துறையினர் சார்பில் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp