காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளின் சார்பில், கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அரசு உத்தரவிட்டிருந்தது, அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் பாஞ்சாலங்குறிச்சி கிராம பஞ்சாயத்து உட்பட்ட சிலோன் காலனியில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப்பணிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
கிராம சபை கூட்டத்தில் பல்வேறு காரசார வாதங்கள் நடைபெற்றன அதில் முக்கிய பிரச்சினையாக குடிதண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதை தடுக்க கிராம பஞ்சாயத்து சார்பில் அறிவிப்பு பலகை வைக்க பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர் மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்துக்கு சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 31 லட்சம் வழங்கப்பட்டுள்ளது . ஐந்து சென்ட் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டி முடிக்க பஞ்சாயத்து சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது .
இதில், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.