பாஞ்சாலங்குறிச்சி சுந்தரலிங்கம்நகர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!

 

பாஞ்சாலங்குறிச்சி சுந்தரலிங்கம்நகர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு மனுக்கள் வாங்கினார் .

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சை சிலோன்காலனி, கவர்னகிரி சுந்தரலிங்கம் நகர் மற்றும் அகிலாண்டபுரம், வடக்கு ஆவாரங்காடு ஆகிய கிராமங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

பாஞ்சை சிலோன் காலணியில் நீர்வடிப்பகுதி மேம்பட்டு முகமை பிரதம மந்திரி விவசாய நீர்பசன திட்டம் WDC PMKSY 2.0 பாஞ்சாலங்குறிச்சி மற்றும் கீழமுடிமன் நீர்வடுப்பகுதி 56 பயனாளிகளுக்கு விவசாய கருவிகள் வழங்கினார் தையல் இயந்திரம் – 8 விசை தெளிப்பான் – 6 பேட்டரி தெளிப்பான் – 19 தார்ப்பாயி – 18 தீவன புள் வெட்டும் கருவி – 5 SC – 90% மானியம் மற்றவர்களுக்கு 80% மானியத்தில் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பட்டா பிரச்சனைக்கு சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மைத்தனர் மற்றும் குடிநீர் தரம் இல்லாமல் இருப்பதால் அதுக்கு மாற்று வழி செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

பின்னர் சுந்தரலிங்கம் நகர் சென்ற சட்டமன்ற உறுப்பினர் அங்குள்ள பொது மக்களிடம் கிராமத்தின் குறைகளை கேட்டறிந்தார் சுந்தரலிங்க நகர் முழுவதும் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர் மற்றும் குடிநீர் தொட்டி பொழுதாகி இருப்பதால் விரைவில் சரி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது மேலும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க உத்தரவிட்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வடக்கு ஆவாரங்காடு சென்ற உறுப்பினர் அங்கு சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கும் ஊருக்கு செல்லும் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனர் . மேலும் ஊரின் அருகில் உள்ள குளம் ஆபத்தான நிலையில் உள்ளது என விரைவில் நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை வைத்தனர்.

அகிலாண்டபுரம் கிராமத்தில் நடமாடும் ரேஷன் கடை வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர் மேலும் அருகில் உள்ள பள்ளியின் தளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதை பார்வையிட்டார். இந்த கிராம முழவதும் சாலை சக்கடை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் சென்ற அனைத்து கிராமத்திலும் மகளிர் உரிமைத்தொகை கோரிக்கைகள் தான் அதிகமாக இருந்தன. பதிவான அனைத்து மகளிர்க்கு பணம் பெற நடவடிக்கை என உறுதியளித்தார்.

இந்த முகாமிற்கு யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சாலை, தெரு விளக்கு, குடிநீர், வடிகால் பள்ளி கட்டிடம் சீர் அமைப்பு ,இலவச பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர் . பொதுமக்களின் கோரிக்கையை அனைத்தும் உடனே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சண்முகையா எம்.எல்.ஏ உறுதியளித்தார். தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை பெறாத மகளிர்க்கு மேல் முறையீடு செய்வதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் வட்டார சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் கிரி, ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார், பஞ்சாயத்து தலைவர்கள் கமலாதேவி யோகராஜ், முன்னாள் ஊரட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி, முனியசாமி, கொடியன்குளம் அருண்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp