பேருந்துகளின் காலவரைமுறையற்ற இயக்கத்தால் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!! சரியான நேரங்களில் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை!!!

சிறுவாணி மலைக் கிராமங்களுக்கு, அரசு பேருந்துகள் ஒரே நேரத்தில் ஜோடியாக வருவதால், பேருந்துக்காக பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கோவை, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் அதனைச்சுற்றி, சாடிவயல், சீங்கபதி, வெள்ளபதி, பொட்டப்பதி, ஜாகீர்போரத்தி, சர்க்கார் போரத்தி உள்ளிட்ட மலை கிராமங்களும், நல்லூர் வயல், சப்பாணிமடை உள்ளிட்ட கிராமங்களும் உள்ளன. இங்குள்ள மக்கள், நாள்தோறும் வேலை, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனை என, தங்களது அனைத்து தேவைகளுக்கும், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் மற்றும் மாநகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

இக்கிராமங்களுக்கு, சிறுவாணி மப்சல் பேருந்து மற்றும் சாதாரண பேருந்து என, 6 வழித்தட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசு பேருந்துகள், குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை. பல நேரங்களில், ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் ஜோடியாக வருகின்றன. அதுவும், அந்த பேருந்து வந்து செல்லும் நேரத்திற்கு முன்பே வருகிறது. இதனால், ஒரே நேரத்தில் இரண்டு பேருந்துகள் சென்றுவிட்டால், அடுத்த பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

பள்ளி, கல்லூரி முடியும் நேரத்திற்கு முன்பே, பேருந்துகள் சென்றுவிடுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவ, மாணவிகள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பது தொடர் கதையாகி வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இப்பிரச்னை குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பிரச்னை பற்றி, பல முறை புகார் அளித்தும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால், பேருந்துகள் இயக்கியும் மக்களுக்கு பயனில்லாமல் போகிறது.

எனவே, இந்த வழித்தடத்தில் பேருந்துகளை சரியான நேரத்திற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியுடன் இயக்க வேண்டும். இங்குள்ள பேருந்து நிறுத்தங்களில், பேருந்துகள் வரும் நேரம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்’ என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp