கோவில்பட்டி அருகே முடுக்கலான்குளத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் தியாகி,சமூக நீதித்துறை இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க கயத்தார் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சாமிராஜ்,தேவேந்திர குல கூட்டமைப்பு பெருமாள் பாண்டியன் சார்பாக மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னர் கொடி ஏற்றி,பாயசம்,சாக்லேட் பள்ளி குழந்தைகளுக்கு ஊர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூரில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம் , ஞானசுந்தரி அம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
இம்மானுவேல் சேகரன் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்க துவங்கினர், தனது 19 வயதில் இரட்டை குவளை முறைக்கு எதிரான மாநாட்டையும்,தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என 1954 ஆம் ஆண்டு மாநாடு நடத்தியவர்.
இந்த நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பாலகிருஷ்ணன்,இளைஞர், இளம்பெண் பாசறை கிளை செயலாளர் ப.செந்தூர்குமார் மற்றும் இளைஞர்கள் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.