ஒட்டப்பிடாரம் வேளாண்மை துறையின் சார்பில் 2 நாள் மாநில அளவிலான விவசாயிகள் கல்வி சுற்றுலா.!!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் இரண்டு நாள் மாநில அளவிலான விவசாயிகள் கல்வி சுற்றுலாவிற்கு காட்டுநாயக்கன்பட்டி மற்றும் எப்போதும் வென்றான் கிராம விவசாயிகள் கோயம்புத்தூர் வேளாண்மை கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறு தானிய மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாக அறுவடை பின் தொழில்நுட்ப துறை பேராசிரியர் திருமதி. கீதா அவர்கள் விளக்கமளித்தார் பின்னர் அறுவடை பின் தொழில்நுட்ப துறை பேராசிரியர் திரு. வீரன்ன அருண் கிரிதரி சிறு தானிய மதிப்பு கூட்டுதல் உணவுகள் குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.திருமதி. பத்மாவதி தினசரி உணவில் சிறு தானிய பயன்கள் குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வகுமார்,மங்கையர்கரசி சிறப்பாக செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.