250 பெண் குழந்தைக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி வெள்ளப்பட்டி கிளை அஞ்சலகத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் கீழஅரசடி ஊராட்சி வெள்ளபட்டியில் புதிய கிளை அஞ்சலகத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார். ஓட்டப்பிடாரம் அருகே கீழஅரசடி ஊராட்சி வெள்ளபட்டி கிராமத்தில் கிளை அஞ்சலகம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்ட கிளை அஞ்சலக திறப்பு விழா இன்று காலையில் நடைபெற்றது. பின்னர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு கிளை அஞ்சலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து வெள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 250 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் துவங்க தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையாவிடம் ரூபாய் 25,000 வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா , ஊராட்சி மன்ற தலைவர் A T ராயப்பன், தூத்துக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா, உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் வசந்த சிந்துதேவி, ஹேமாவதி, அருட்தந்தை வினித் ராஜா
மற்றும் அஞ்சல் துறை ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp