கோவை மாவட்டத்தில் தற்பொழுது மழை பெய்து வருகிறது.கோவை வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அவனது வீட்டில் உள்ள காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற பொழுது காலணியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது.
இதனை கேட்டு காலணியை நகர்த்தி பார்த்ததில் காலணிக்கு உள்ளே பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதனை பார்த்தவுடன் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுத்தனர் அங்கு சென்ற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்துள்ளார். பிடிப்பட்ட பாம்பு நாகபாம்பு என தெரியவந்தது.
பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மழைக்காலத்தில் பாம்புகள் வெளியில் உலா வரும் பொழுது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம் எனவும் அதன் காரணமாக காலணிக்குள் புகுந்திருக்கும் என பாம்பு பிடி வீரர் கூறியுள்ளார். பொதுமக்கள் இது போன்ற மழை காலங்களில் கவனமாக இருப்பது அவசியம் என மோகன் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.