வால்பாறை அடுத்த முக்கோட்முடி பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை இடித்து தள்ளிய காட்டு யானை கூட்டம்!!!

கோவை மாவட்டம் வால்பாறையை ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பிபிடிசிக்கு சொந்தமான முக்கோட் முடி எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் நள்ளிரவு மூன்று மணி அளவில் 9 யானைகள் கொண்ட கூட்டம் அப்பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் கமலம் என்பவரது வீட்டை உடைத்து அங்குள்ள சிலிண்டர் மற்றும் பெட் சீட் வீட்டு உபயோகப் பொருட்களை அள்ளி வெளியே வீசி தும்சம் செய்து உள்ளது.
இதில் நல்வாய்ப்பாக அவர்களுடைய மகள் பிரசவத்திற்காக ஊருக்கு சென்று விட்ட காரணத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது வீட்டை இடித்து தள்ளிக் கொண்டு இருந்தது.
இதனை அறிந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறைக்கு தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறையினர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அந்த யானைகளை விரட்டி அடித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இந்தப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரவில் உறங்குவது கூட பயந்த நிலையில் உறங்க வேண்டிய அவல நிலை இருப்பதாக அந்த பகுதியில் வசித்து வருபவர்கள் தெரிவித்தனர்.
தற்போது வால்பாறை பகுதியில் அதிக அளவில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp