விளாத்திகுளம் அருகே விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தபோது மின்னல் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்…

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் காடல்குடி குறுவட்டத்திற்கு உட்பட்ட கே.துரைசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி அமுதமலர்(40) . இவர் இன்று மாலை தனது நிலத்தில் விவசாய பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் இடி மின்னல் அமுதமலர் மீது விழுந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடல்குடி போலீசார் அமுதமலரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை விஏஓ சீனிவாசன் பார்வையிட்டார். உயிரிழந்த அமுத மலருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மின்னல் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp