வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி மற்றும் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோருக்கு பாராட்டு!!!

வேலூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள களவு போன செல்போன்கள் மீட்க்கப்பட்டு உரியவர்களிடம் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து கூடுதல் விபரங்களுக்காக வேலூர் சரக காவல் அலுவலகத்தில் கேட்டபோது கடந்த ஜூலை மாதம் எமது சரக துணைத் தலைவர் முத்துசாமியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனும் இணைந்து களவு போன செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க செல் டிராக்கர் (Cell Tracker)என்ற (Google Form)கூகுள் பார்மைஐ அறிமுகப் படுத்தினார்கள் அதன்படி 9486214166 என்கிற எண்ணிற்கு வாட்ஸாப் வழியாக “Hi” இன்று மெசேஜ் அனுப்பி தொலைந்து போன மற்றும் களவு போன செல்போன் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டது செல் டிராக்கர் மூலமாக புகார்கள் பெறப்பட்டு ரூபாய் 40 லட்சத்தில் 47 ஆயிரம் மதிப்புள்ள 372 செல்போன்கள் இதுவரை மீட்க்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த செய்தியை ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குனர் நடராஜிடம் பகிர்ந்த போது,நீங்கள் சொன்ன செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். செல்போன் திருட்டு காவல்துறைக்கு சவாலாக இருக்கிறது ஒன்று. பொதுமக்களுக்கும் புகார் அளிப்பதில் சில நடைமுறை சிரமங்கள் இருந்தன இந்த நிலையில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனும் தொலைந்து போன மற்றும் களவு போன செல்போன்களை கண்டுபிடிக்க செல் ட்ராக்கர் என்கிற ஒரு மிகச்சிறந்த வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர் அவர்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் என்றார் நடராஜ்.

புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி புகார் அளிக்கும் வழி வகையை எளிமையாக்கி களவு போன மற்றும் காணாமல் போன கைபேசியை விரைந்து கண்டுபிடித்திட வழி செய்த காவல் அலுவலர்களை ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குனர் நடராஜுடன் இணைந்து நாமும் பாராட்டிடுவோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp