தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆதனூர் கிராமத்தில் ஆறுமுகசாமி (29) என்பவர் இந்த ஊரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக ஊரில் உள்ள துக்க நிகழ்ச்சியில் மது போதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் சங்கரபாண்டி ஆகிய இருவரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு அவரது உடன் பிறந்த தம்பி முருகன் மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் முகேஷ் மற்றும் மாரிசெல்வத்தை அழைத்துக் கொண்டு நேற்று ஆதனூர் கிராமத்தில் வைத்து மது போதையில் இருந்த இவர்கள் மதியம் 3 மணிக்கு மேல் மது போதை தலைக்கேறியதால் செய்வதறியாமல் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிமாரியப்பன் மற்றும் அழகுராம் ஆகியோரது ஓட்டு வீடுகளை சேதப்படுத்தி உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அதை தட்டி கேட்ட வேத நாராயணன் என்பவருக்கு இடதுகை மற்றும் நெற்றியில் அறிவால் வெட்டும் மற்றும் கர்ணன் என்பவருக்கு வயிற்றில் கீறல் காயமும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகே சென்றுள்ளனர் அப்போது தலையாரி துரைராஜ் என்பவர் எப்போதும் வென்றான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதனால் அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து தட்டி கேட்ட தலையாரி துரைராஜ் என்பவரை இடது கையில் வெட்டியுள்ளனர்.
இதை அடுத்து ஊரில் உள்ள பொதுமக்கள் மேற்கண்ட நான்கு நபர்களையும் பிடித்து வைத்து எப்போதும்வென்றான் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். மேலும் காயம் அடைந்த வேத நாராயணன் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் தலையாரி துரைராஜ் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . மேலும் நான்கு நபர்களையும் எப்போதும்வென்றான் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.
One Response
தங்களின் நாளை வரலாறு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது .உடனுக்குடன் செய்தியை தருகிறது நன்றி.