கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள உபாசி தேயிலை தோட்டத்தில் இன்று தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்தனர் அப்பொழுது திடீரென அப்பகுதியில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் திடீரென்று தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதன் காரணமாக அங்கு வேலை செய்து கொண்டிருந்த இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வலியால் துடித்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இங்கு ஒரு சுகாதார மையம் அமைக்க வேண்டும் அப்பொழுதுதான் இது போன்ற அபாயகரமான சூழ்நிலைகளில் பொது மக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். அவசரமான காலகட்டத்தில் கூட இப்பகுதியில் இருந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சென்று தான் சிகிச்சை பெற வேண்டி உள்ளது மேலும் இந்தப் பகுதியில் தொலைபேசி சிக்னல் சரியாக கிடைப்பதில்லை எனவே அவசரமான காலகட்டங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் தகவல் பரிமாற்றம் என்பது செய்ய முடியாமல் போகின்றது.
எனவே அவசர காலகட்டங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக இந்த பகுதியில் ஒரு சுகாதார மையமும் தொலைபேசியில் சிக்னல்கள் ஒழுங்காக கிடைக்கும் படியும் செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.