கோவை மாவட்டம் வால்பாறை உருளிக்கல் எஸ்டேட் தென்னமர பேருந்து நிறுத்தம் அருகே வேகத்தடை இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் வேகத்தை கட்டுப்படுத்தாமல் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது அதேசமயம் இப்பகுதியில் இருக்கும் மாணவர்கள், வயதான பெரியவர்கள்,கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் குடியிருப்பு பகுதியில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு சாலையைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் வேகத்தடை அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வால்பாறை CITU நிர்வாகிகளான
நேதாஜி,விஜி ஆகிய இருவரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளனர்.
மனுவில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உருளிக்கல் எஸ்டேட் தென்னமர பேருந்து நிறுத்தம் அருகே இரு புறங்களிலும் வேகத்தடை அமைத்து விபத்தில்லா பயணமும் இப்பகுதியில் இருக்கும் பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
-சுரேஷ்குமார்.