போத்தனூர் திருமறை நகரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!! காவல்துறையினர் விசாரணை!!!

கோவை போத்தனூர் திருமறை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் 62 வயதான அப்துல் ரஹீம். சிப்ஸ் கடை வைத்துள்ளார். இவரது மகன் 24 வயதான ரியாஷ். பிகாம் (சிஏ) படித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் ரியாஷ் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ‌‌. இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த ரியாஷ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp