தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயக்குழ சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 ஆவது பிறந்த நாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு குடியிருப்பு பகுதிகளில் கட்டபொம்மனின் உருவ படம் திறக்கப்பட்டது, ஆலயக்குழ தலைவர் முருகபூபதி அவர்கள் பின்னர் கொடியை ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து ஆலயக்குழ சார்பில் பொதுமக்கள் ஊர்வலமாக சிறுவர் சிறுமி சிலம்பம் ஆட்டத்துடன் கோட்டையில் உள்ள வீரசக்கதேவி கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் வீரசக்கதேவி கோவில் குழ செயலாளர் செந்தில் குமார் மற்றும் சுப்புராஜ் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.