பொள்ளாச்சி கந்து வட்டிக் கொடுமையால் வாலிபர் தற்கொலை முக்கிய பிரமுகர் கைது…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வரதராஜ் என்பவர் கூலி வேலை செய்து வந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

இதனை கிருஷ்ணகுமார் கந்துவட்டி என்ற பெயரில் வரதராஜிடம் அதிக வட்டி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டியை முறையாக கொடுக்கவில்லை என கிருஷ்ணகுமார் வரதராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் பேசியதாகவும் மேலும் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனம் உடைந்த வரதராஜ் தான் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டது குறித்து கடிதம் மூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஆனைமலை காவல் துறையினர் கிருஷ்ணகுமார் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp