கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் அமைந்துள்ள மிக சுற்றுலா தளமான குண்டளை அணைக்கட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த அணைக்கட்டின் மிக சிறப்பு என்பது நூறு வருடங்களுக்கும் அதிகமாக உள்ள மரங்களும் படகு சவாரியும் தான்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்றைய தினம் மதியம் ஒரு மணியைத் தொடர்ந்து குண்டளை அணைக்கட்டும் முழுவதுமாக மூடுபனியால் மூடப்பட்டது. இந்த நேரங்களிலும் கூட தனது அருகில் இருப்பவர்களை கூட தெரியாத இந்த சூழ்நிலையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரியை மிக மகிழ்ச்சியுடன் அனுபவித்து வந்தனர்.
குண்டளை அணைக்கட்டில் மூடுபனி முழுவதுமாக மூடியதைத் தொடர்ந்து மிகவும் குளிரும் மிக அதிகமாக அனுபவித்து வந்தது இந்தக் குளிரையும் மிக இன்பமாக அனுபவித்தும் மூடுபனியால் மூடப்பட்டதையும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் மிக மகிழ்ச்சியாக கண்டுகளித்து திரும்பிச் சென்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.