கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள், பொதுமக்கள் உள்ளிட்ட மக்களின்
பெரும்பாலானோர் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணையாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட மூலம் உயிர் காக்கும் பெரும்பாலான சிகிச்சைகள் இலவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் இதற்கு தேவையான முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் வருகின்ற 20.1. 2024 சனிக்கிழமை அன்று வார்டு 1,2,3,4,9,11,12,16 உள்ளிட்ட பகுதிகளுக்கும் அதே சமயம் சோலையார் டேம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வார்டு எண் 5,6,7,8,18 உள்ளிட்ட பகுதிகளுக்கும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 21.01.2024 அன்று 10,13,14,15,17,19,20,21 உள்ளிட்ட பகுதிகளுக்கும் நடைபெறும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
இதற்குத் தேவையான ஆவணங்கள் குடும்ப அட்டை, குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் கார்டு ஒரிஜினல் மேலும் வருமானச் சான்றிதழ் தேவைப்படுபவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனுக்குடன் வருமானச் சான்றிதழ் பெற்று தரப்படும் இதன் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட் அட்டை வாங்கிக் கொள்ளலாம். மேலும் புதிய மகளிர்க்கு வங்கி கடன் வழங்குதல் சுயதொழில் செய்பவருக்கு தாட்கோ வங்கி மூலம் கடன் உதவி பெறுதல் இவை அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் உடனுக்குடன் பயன் பெரும் வகையில் செய்து தரப்படும். எனவே பொதுமக்கள் இதை கருத்தில் கொண்டு தவறாமல் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று வால்பாறை திமுக நகரச் செயலாளர் குட்டி ( எ ) சுதாகர் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.