தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜு அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். மற்றும் டாக்டர் பரமசிவம் மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலந்து சிறப்புரை யாற்றினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்இளம் பெண்கள் பாசறை பொறுப் பாளர்களுக்கு தேர்தலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் கே பெருமாள் சத்யா முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மோகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பழனிச்சாமி, கோவில்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அன்பு ராஜன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
அழகர்சாமி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.