ஓட்டப்பிடாரம் அருகே தெற்குசிலுக்கன்பட்டி யில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை விஜயகுமார் மெடிக்கல் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தெற்குசிலுக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வடக்கத்தி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் பிப்ரவரி 13 செவ்வாய்க்கிழமையான இன்று காலை காலை 7 மணி அளவில் நடைபெற்றது. பந்தயம் ஆனது சின்ன மாடு, பூஞ்சிட்டு என இரு பிரிவாக நடைபெற்றது. மாட்டுவண்டி போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட வீர விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் மெடிக்கல் விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சின்ன மாடு வண்டி பிரிவில் சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி முதலிடத்தையும், குலசேகர நல்லூர் வீரபெருமாள் அய்யனார் வண்டி இரண்டாவது இடத்தையும், கம்பம் அங்காளஈஸ்வரி வண்டி மூன்றாவது இடத்தையும், வேளாங்குளம் கண்ணன் வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 28 வண்டிகள் கலந்து கொண்டதால் இரு பிரிவாக நடத்தப்பட்டது. இதில் முதல் பிரிவில் ராமச்சந்திராபுரம் முகிலா வண்டி முதலிடத்தையும், பேரூரணி கோட்டைவால் அய்யனார் வண்டி இரண்டாவது இடத்தையும், நொச்சிக்குளம் சீனி பாண்டி வண்டி மூன்றாம் இடத்தையும், காயலூரணி விஷ்ணு வண்டி நான்காவது இடத்தையும் பிடித்தன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரண்டாவது பிரிவில் மேல மீனாட்சிபுரம் முத்து ஈஸ்வரி வண்டி முதலிடத்தையும், சுரேஷ்குமார் வண்டி இரண்டாவது இடத்தையும், சீவலப்பேரி துர்காம்பிகா வண்டி மூன்றாவது இடத்தையும், கருத்தபாண்டி வண்டி நான்காவது இடத்தையும் இடித்தன.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp