தூத்துக்குடி மாவட்டம்
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குறுக்குச்சாலை ஊராட்சியில் கக்கரம்பட்டியில் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 7-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் கட்டிடத்தையும், கக்கரம்பட்டி பாஞ்சாலங்குறிச்சி சந்திப்பில்
ரூ. 5.50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தையும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா,கிரி சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் செல்வகுமார் ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் குறுக்குச்சாலை ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன்,எப்போதும்வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார் குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி,
மாவட்ட பிரதிநிதி தளவைராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், குறுக்குச்சாலை கிளைச்செயலாளர் லட்சுமணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை நிருபர்
-முனியசாமி.