காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த குட்டியானையை காப்பாற்றி தாயுடன் சேர்த்த வனத்துறை ஊழியர்கள் !!!

பொள்ளாச்சி அடுத்த சர்க்கார் பதி அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்த குட்டியானையை காப்பாற்றி தாயுடன் சேர்த்த வனத்துறை ஊழியர்களுக்கு பாராட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் உள்ள கான்டூர் கால்வாயில் தண்ணீர் குடிப்பதற்காக இறங்கிய யானை குட்டி ஒன்று தவறி விழுந்தது. இதை காப்பாற்றுவதற்காக தாய் யானையும் காண்டூர் கால்வாயில் இறங்கியது நீண்ட நேரம் போராடியும் தாய்யானை குட்டி யானையை காப்பாற்ற முடியாத நிலையில் அதிக சத்தம் எழுப்பியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது தாயும் குட்டி யானையும் கால்வாயில் இருப்பதை வனத்துறை ஊழியர்கள் பார்த்தனர். குட்டி யானையுடன் தாய் யானை இருப்பதை பார்த்த வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையை காப்பாற்ற காத்திருந்த நிலையில் தாய் யானை சற்று தொலைவில் சென்றவுடன் கால்வாயில் இறங்கி குட்டி யானையை காப்பாற்றி கரைப்பகுதியில் விட்டனர். இதனை அடுத்து குட்டி யானையும் தாய் யானையும் இணைந்து சென்றது.

தக்க சமயத்தில் வந்து காப்பாற்றிய வனத்துறை ஊழியர்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp