கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் சஞ்சய்(17). இவர் நேற்று எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மதுக்கரை மார்க்கெட் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சஞ்சய்யை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இரந்தார். இது குறித்து கோவை மாநகர மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதேபோல் கோவை உக்கடம் கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் பிரவீன் காந்த்(19). நகைப்பட்டறை ஊழியர். இவர் நேற்று தனது நண்பர் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஷ்குமார் (19) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். சுங்கம்-உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்றபோது எதிர்பாராத விதமாக பைக் சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீன்காந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த சதீஷ்குமார் தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயரிழந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவையில் ஒரே நாளில் விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.