தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருடன் கலந்துரையாடிய கன்னியாகுமாரி சட்டமன்ற உறுப்பினர்!!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் (வ) ஒன்றியத்திற்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி பால்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினமான நேற்று (28.2.2024) மாணவ மாணவியருடானான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் கன்னியாகுமரி (கி) மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் N.தளவாய்சுந்தரம்Bsc,BL அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவியருடன் கலந்துரையாடி பொது அறிவு திறன் வளர்க்கும் வகையில் கேள்வி எழுப்பி பரிசுகள் வழங்கி சிறப்பித்ததுடன் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் தன் சொந்த நிதியிலிருந்து ஜெராக்ஸ் மெஷின் வழங்கினார்.

 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் (வ) ஒன்றிய கழக செயலாளர் S.ஜெஸீம் கழக மாநில மீனவரணி இணை செயலாளர் முனைவர் பசிலியான்நசரேத் அஞ்சுகிராமம் பேரூர் கழக செயலாளர் ராஜபாண்டியன் அஞ்சுகிராமம் பேரூர் கழக நிர்வாகிகள்

மேட்டுக்குடி முருகன், மணிகண்டன் அவர்கள் சுசீந்திரம் பேரூர் கழக செயலாளர் குமார் குமரி (கி) மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் வைகுண்டமணி லீபுரம் லீன் அவர்கள் ஆரல் கிருஷ்ணன் தோவாளை (வ) ஒன்றிய கழக பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் அரசு கலைக் கல்லூரி முதல்வர் நிர்வாகிகள் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமாரி இந்திரனுடன்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp