கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
பள்ளி வளாகத்தில் நடந்தது நடந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆண்டுதோறும் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9, 10, 11, 12ம் வகுப்பு வரை வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடத்திற்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கடந்த 3ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு பிப் 28ம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.இதில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 11 பேர் தேர்வில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ஏபிகே பழனி செல்வம் தலைமை வகித்தார்.சங்க பொருளாளர் சுரேஷ்குமார்,பத்ரகாளியம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிச் செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் மேரி டயானா ஜெயந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
இதில் வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள்,பள்ளிக் குழு உறுப்பினர்கள் மணிக்கொடி,பொன் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி தலைமையாசிரியை செல்வி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.