கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட்டுகளில் தற்பொழுது காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகள் மற்றும் உடமைகளை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதேபோன்று வால்பாறை அடுத்துள்ள நடுமலை எஸ்டேட் சமாதானபுரம் அருகில் உள்ள தொழிலாளர்களின் குடியிருப்பை ஒற்றைக் காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் வீட்டில் கதவு ஜன்னல் உட்பட்ட பொருட்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் மிகுந்த அச்சம் அடைந்த தொழிலாளர்கள் யானையை சத்தம் எழுப்பி விரட்டி உள்ளனர். இதில் தேயிலைத் தோட்ட சூப்பர்வைசர் உண்ணிகிருஷ்ணன் மற்றும் ஜெயா என்பவரது வீட்டின் கதவு மற்றும் மேற்கூறையை உடைத்து சேதப்படுத்தியதால் அவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்தப் பகுதியில் மட்டுமல்ல வால்பாறையை சுற்றியுள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தற்பொழுது மனித வனவிலங்குகள் மோதல் அதிகரித்துள்ளது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன் மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.